google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Recipes and Cooking Tips: December 2009

Wednesday, December 23, 2009

Aval payasam

It is a quick and easy to prepare dessert.


அவல் பாயாசம்


இந்த இனிப்பான பாயாசம், உடனடியாகச் செய்யத்தக்கதாகும்.


தேவையான பொருட்கள்:


  • அவல்: 1/2 கப்

  • நெய்: சிறிதளவு

  • பால்: 2 கப்

  • சர்க்கரை: 1 1/2 கப்

  • முந்திரி: பத்து அல்லது பதினைந்து
  • திராட்சை: பத்து அல்லது பதினைந்து
செய்முறை:

  • அவலை அரைகுறையாக அரைக்கவும்.

  • அரைத்த அவலை நெய்யில் சிவக்க வறுக்கவும்.

  • முந்திரிப் பருப்புகளையும் வறுக்கவும்.

  • பாலைக் காய்ச்சவும்.

  • கொதிக்கும் பாலில் அவலைச் சேர்த்து சுமார் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு சர்க்கரையைச் சேர்த்து கிளறிக் கொண்டு, முந்திரியைப் போடவும்.

  • கிஸ்மிஸ் என்னும் உலர் திராட்சையையும் போட்டுக் கிண்டி விடவும்.

  • மகிழ்வுடன் பரிமாறி அருந்தி மகிழவும்.

Thursday, December 17, 2009

Cashew nut Pakkoda / Gaaju pakora

Cashew nut pakkoda is a very crispy and tasty snack.


முந்திரி பக்கோடா


தேவையான பொருட்கள்:



  • முந்திரிப் பருப்பு - 100 கிராம்

  • கடலை மாவு - 1 கப்

  • மிளகாய்ப் பொடி - 1 தேக்கரண்டி

  • பெருங்காயத்தூள் - சிறிதளவு

  • எண்ணெய் - தேவையான அளவு

  • உப்பு - தேவையான அளவு

செய்முறை:


  • கடலை மாவில் சிறிதளவு தண்ணீரைத் தெளித்து, முந்திரிப் பருப்பு, பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்ப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து, கட்டிபடாமல் பிசையவும்.




  • மிதமாக எரியும் அடுப்பில் இருப்புச்சட்டி என்னும் வாணலியை வைத்து எண்ணெய் விடவும்.
  • சூடேறியதும், பிசைந்து வைக்கப்பட்டுள்ள கலவையை உதிர்த்து தங்கமான நிறத்தில் வறுத்து அரிகரண்டியின் துணை கொண்டு முந்திரி பக்கோடாவை எடுக்கவும்.

Dessert without milk

பால் இல்லாத ஜவ்வரிசி பாயாசம்



தேவையான பொருட்கள்:



  • சேமியா - 100 கிராம்
  • ஜவ்வரிசி - 100 கிராம்
  • சீனி - 250 கிராம்
  • முந்திரி - 15
  • ஏலக்காய் - 5
  • உலர்திராட்சை - 15
  • நெய் - 50 கிராம்
செய்முறை:
  • ஜவ்வரிசியை நன்றாக வேக வைக்கவும்.
  • சேமியாவைக் கொதிநீரில் போட்டு வேகவைத்து, வடிகட்டி, சூடாக இருக்கும் போது சுமார் பாதியளவு சீனியைக் கலக்கவும்.
  • ஜவ்வரிசி வெந்த நீரில் சீனி கலந்த சேமியாவைச் சேர்த்துக் கிளறி, மீதமுள்ள சீனியையும் சேர்த்துக் கொதிக்க விடவும்.
  • முந்திரியையும் கிஸ்மிஸ் என்னும் உலர்திராட்சையையும் நெய்யில் வறுத்துச் சேர்க்கவும்.
  • ஏலக்காயைப் பொடியாக்கித் தூவவும்.

  • அடுப்பில் இருந்து இறக்கவும்.

Sunday, December 6, 2009

Vatral kuzhampu / vaththa kulampu

It is a very delicious extract, added with cooked rice and taken with great pleasure.


வற்றல் குழம்பு (வத்தக் குழம்பு)

தேவையான பொருட்கள்:
  • புளி: எலுமிச்சையளவு
  • வெள்ளைப் பூண்டு: ஆறு பல்
  • சின்ன வெங்காயம்: 100 கிராம்
  • கறிவேப்பிலை: சிறிது
  • நல்லெண்ணெய்: கொஞ்சம்
  • வெந்தயம்: 1/4 தேக்கரண்டி
  • மஞ்சள்தூள்: 1/4 தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள்: 1/2 தேக்கரண்டி
  • மல்லித்தூள்:2 1/2 தேக்கரண்டி
  • மிளகுத்தூள்: 1/4 தேக்கரண்டி


    செய்முறை:



  • புளியைக் நீரில் ஊறப்போட்டு, கரைத்துக் கொள்ளவும்.
  • பூண்டை உரித்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  • இருப்புச்சட்டி என்ற வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணையைச் சிறிது ஊற்றி, வெந்தயம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • நன்கு வதங்கியபின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், மிளகுத்தூள் சேர்த்து, புளிக்கரைசலை ஊற்றி, தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
  • எண்ணெய் மிதந்து வரும்போது இறக்கி விடவும்.
    சோறு (சாதம்) சாப்பிடும் போது சாம்பாருக்கு அடுத்ததாக இந்த வற்றல் குழம்பு மிகவும் சுவை (ருசி) கூட்டும்.


பிறகு ரசம், பாயாசம், தயிர் அல்லது மோர் என்று சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடுவதை நினைத்தாலே இனிக்கிறது.