google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Recipes and Cooking Tips: January 2010

Monday, January 25, 2010

Indian Gooseberry Rice

நெல்லிக்கனிச் சோறு / நெல்லிக்காய் சாதம்

வைட்டமின் 'சி' சத்து நிறைந்து, ஆம்லா என்று ஹிந்தி மொழியிலும், அமலாகி என்று வடமொழியிலும் (சமஸ்கிருதம்), Indian Gooseberry என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படுவது பெரிய நெல்லிக்காய் ஆகும். இளமையை நீட்டிக்கும் அரிய இக்காயகற்பத்தை (காயகல்பம் ) எங்ஙனமாயினும் உணவில்
சேர்த்துக் கொள்வது சாலச் சிறந்ததாகும்.


தேவையான பொருட்கள்:


  • வெந்த சோறு (வேக வைத்த சாதம்): 1 கோப்பை
  • நெல்லிக்காய்: 5 (துருவிக் கொள்ளவும்)
  • வறமிளகாய்: 5
  • கறிவேப்பிலை: 2 கொத்து
  • கடுகு: 1/4 தேக்கரண்டி
  • உளுந்தம் பருப்பு (உளுத்தம்பருப்பு): 1/2 தேக்கரண்டி
  • கடலைப்பருப்பு: 1/2 தேக்கரண்டி
  • பெருங்காயம்: 1/4 தேக்கரண்டி
  • முந்திரி: 1 தேக்கரண்டி
  • நிலக்கடலை: 1 தேக்கரண்டி
  • பொட்டுக்கடலை: 1 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள்: 2 சிட்டிகை
  • நெய்: 2 தேக்கரண்டி
  • நல்லெண்ணெய்: 1 மேஜைக்கரண்டி
  • உப்பு: தேவையான அளவு
செய்முறை:

  • இருப்புச்சட்டி என்ற வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு , உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, வறமிளகாய், பெருங்காயம், மஞ்சள் தூள் ஆகியவற்றைப்
    போட்டுத் தாளிக்கவும்.
  • அதோடு துருவப்பட்ட தோப்பு நெல்லிக்காய் அல்லது காட்டு நெல்லிக்காய் என்று சொல்லப்படும் பெரிய நெல்லிக்காயைச் சேர்த்து வதக்கவும்.
  • அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • இக்கலவையுடன் சற்றுமுன் ஆறிய சோற்றைக் கலக்கவும்; கிளறவும்.
  • இத்துடன் முந்திரியையும் , நிலக்கடலையையும், பொட்டுக்கடலையையும் நெய்யில் வறுத்துச் சேர்க்கவும்.
விருப்பப்பட்ட சட்னியுடன் ருசித்துச் சாப்பிடவும்.

Friday, January 15, 2010

Coconut milk kuruma / Thengai paal kuruma

Coconut milk kuruma / Thengai paal kuruma / kurma / kurmaa / korma / kormaa / khorma / khormaa is a very delicious easy to prepare side dish, taken with idli / idly, dosai / dosa, chapati / chapatti / chappaathi, purotta / parantha / barotta.


தேங்காய்ப் பால் குருமா


சுவையான இந்தக் குருமா, இட்லி,தோசை,சப்பாத்தி, புரோட்டா போன்றவற்றுடன் சேர்த்துக்கொள்ள மிகவும் அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:


தேங்காய்ப் பால்: இரண்டு கப்

உருளைக்கிழங்கு; இரண்டு

சின்ன வெங்காயம்: பத்து

காரட்: இரண்டு

தக்காளி: இரண்டு

தேங்காய்ப் பூ என்னும் துருவப்பட்ட தேங்காய்: இரண்டு தேக்கரண்டி
பொட்டுக்கடலை: கால் கப்
(இதை சிவகங்கைப் பகுதிகளில் பொரிகடலை என்பார்கள்.)

முந்திரிப் பருப்பு: சுமார் பத்து

பச்சைமிளகாய்: இரண்டு

கசகசா: ஒரு தேக்கரண்டி

பட்டை: சிறிதளவு

லவங்கம்: சிறிதளவு

சோம்பு: சிறிதளவு



செய்முறை:


  • உருளைக்கிழங்குகளை வேகவைத்து, தோலுரித்து, சிறிய துண்டுகளாக்கவும்.


  • வெங்காயத்தைத் தோலுரிக்கவும்.


  • காரட்டையும் தக்காளியையும் பொடிப்பொடியாக நறுக்கவும்.

  • தேங்காய்ப் பூ, பொட்டுக்கடலை, முந்திரிப் பருப்பு, பச்சைமிளகாய், கசகசா ஆகியவற்றை மை போல ( விழுது போல) அரைக்கவும்.

  • இருப்புச்சட்டி என்று சொல்லப்படும் வாணலியில் எண்ணையைக் காய வைத்து பட்டை, லவங்கம், சோம்பு வறுக்கவும்.

  • அதோடு வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

  • மேலும் நறுக்கப்பட்ட உருளைக்கிழங்கு, காரட், தக்காளி சேர்த்து உப்புப் போட்டு வதக்கவும்.

  • இத்துடன் அரைத்த விழுதையும் கால் கப் தண்ணீரையும் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

  • நிறைவாக, தேங்காய்ப் பால் சேர்க்கவும். கொதித்தவுடன் இறக்கி விடவும்.

மனநிறைவுடன் மகிழ்ச்சியாக உணவருந்தவும்.