google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Recipes and Cooking Tips: August 2010

Thursday, August 12, 2010

ரம்ஜான் (ரமலான்) நோன்புக் கஞ்சி

Ramadaan Nonbu Kanji / Ramadan Nombu Ganji / Ramzan Nonbu Cangee / Nombu Conjee / Nonbu Kunji / Nonbu Porridge / Nonbu Gruel


தேவையான பொருட்கள்:
  • பச்சரிசி: 500 கிராம்
  • வெள்ளைப் பூண்டு: 1 
  • கடலைப்பருப்பு: 50 கிராம்
  • வெந்தயம்: 2 தேக்கரண்டி
  • இஞ்சி: இருவிரல் பருமன் 
  • சீரகப்பொடி: 2-3 தேக்கரண்டி
  • மஞ்சள் பொடி: 1 டீ ஸ்பூன்
  • மிளகாய்பொடி: அரை டீ ஸ்பூன்
  • பெரிய வெங்காயம்:  2
  • கேரட்: பாதி
  • தக்காளி: 2 
  • சமையல் எண்ணெய்:  50 மில்லி லிட்டர் 
  • பச்சை மிளகாய்: 2-3 
  • புதினா: ஒரு கொத்து
  • மல்லித் தழைஒரு கொத்து
  • எலுமிச்சை ஜூஸ்: 1 டி ஸ்பூன் 
  • தேங்காய்ப் பால்: 300 மில்லி லிட்டர் 
  • கொத்துக்கறி: 100 கிராம் 
  • உப்பு: தேவையான அளவு
செய்முறை:



  • பச்சரிசிவெந்தயம்கடலைப் பருப்பு ஆகியவற்றை நீரில் அலசி வடித்து தனியாக எடுத்து வைக்கவும்.



  • கொத்துக்கறியை நீரில் கழுவி உப்புமஞ்சள்பொடிமிளகாய்பொடி ஆகியவற்றைக் கலந்து வைக்கவும். 




  • தக்காளியையும்  வெங்காயத்தையும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். 



  • புதினாவையும் , கொத்தமல்லியையும்  காம்பு நீக்கவும். 


  • பச்சை மிளகாய்களின் காம்புகளையும்  நீக்கி விடவும்.



  • கேரட் மற்றும் பாதி இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.



  • எஞ்சிய இஞ்சியையும்வெள்ளைப்பூண்டையும் தோல் நீக்கி மிக்ஸியில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.




  • சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி தேவையான அளவு எண்ணைவிட்டு வெங்காயத்தை வதக்கவும்.



  • நன்கு வதங்கிய வெங்காயத்துடன் தக்காளியைச்  சேர்த்து மேலும் வதக்கவும்.



  • கொத்துக்கறியையும் கலந்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். 



  • நறுக்கப்பட்ட  கேரட் துண்டுகளையும் முழு பச்சைமிளகாய்களையும் சேர்த்து வதக்கவும்.



  • வதங்கும்போது சீரகப் பொடியையும்  மஞ்சள் பொடியையும் தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.



  • மல்லித் தழையைத் தூவிசட்டியைச்சில  நிமிடங்கள் மூடி வைக்கவும்.



  • நெருப்பைக் குறைக்கவும்.


  • மூன்று பங்கு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.



  • கொதித்ததும் அரிசியை மெதுவாகச்சேர்த்து சுமார் அரை மணி அல்லது முக்கால் மணி நேரம் கொதிக்க விடவும்.




  • அப்படிக் கொதிக்கும்போது எலுமிச்சைச் சாற்றைச் சேர்க்கவும்.


  • தேவையான அளவு உப்பிட்டுஅடிக்கடி  கிளறவும். 




  • தேங்காய்ப் பாலுடன் சமபங்கு தண்ணீர் கலந்துகரைந்த அரிசியுடன் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் கிளறவும்.




  • நிறைவாக புதினா இலையைத் தூவிசட்டியை நன்கு மூடிவைக்கவும்.






இதுவே சுவையான நோன்புக் கஞ்சி செய்யும் முறையாகும்.