google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Recipes and Cooking Tips

Wednesday, June 23, 2010

Pumpkin Sambar பூசணிக்காய் சாம்பார்

தேவையான பொருட்கள்:


  • பூசணித்துண்டுகள்: 10
  • தக்காளி: 4
  • வேக வைத்த துவரம்பருப்பு: 4 கரண்டி
  • சாம்பார்பொடி: 2 டீஸ்பூன்
  • மஞ்சள் பொடி: 1/2 டீஸ்பூன்
  • பெருங்காயம்: சிறிதளவு
  • புளி: எலுமிச்சை அளவு
  • எண்ணெய்: 1 டீஸ்பூன்
  • தாளிக்க: கடுகு, கறிவேப்பிலை
  • அலங்கரிக்க: கொத்தமல்லித்தழை
செய்முறை:


  • புளியை சுடுநீரில் கரைக்கவும்.
  • குக்கரில் ஒரு கப் துவரம்பருப்பைக் குழைய வேக வைக்கவும்.
  • அடுப்பை ஏற்றி, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
  • அத்துடன் பூசணித்துண்டுகள், தக்காளி போட்டு மூடி வைத்து வதக்கவும்.
  • பாதி வெந்ததும் புளித்தண்ணீரைக் காய்களுடன் சேர்க்கவும்.
  • மீண்டும் புளியுடன் ஒரு டம்ளர் தண்ணீரைச் சேர்த்து கரைத்துப் புளித்தண்ணீரைச் சேர்க்கவும்.
  • உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் பொடி, பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
  • காய் வெந்தவுடன் பருப்பைக் கரண்டியால் நன்றாக மசித்துச் சேர்க்கவும்.
  • கொத்தமல்லியைக் கழுவி மேலாகத் தூவி அலங்கரிக்கவும்.

Tuesday, June 8, 2010

உளுந்து களி

உளுந்து களி
தேவையான பொருட்கள்:
உளுந்து: 2 உழக்கு
வெல்லம் அல்லது கருப்பட்டி: ருசிக்கேற்ற அளவு
நல்லெண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு
சுருக்கமான செய்முறை:

  • உளுந்தை நன்றாக வறுத்து மாவாக அரைத்து, சிறிதளவு எடுத்துக் கொள்ளவும்.
  • வெல்லத்தை அல்லது கருப்பட்டியை பொடித்துப் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி வாசம் வருமளவு பாகாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி அந்த மாவில் கட்டியில்லாது கரைத்து அடுப்பில் வைத்துக் கிளறவும்.
  • இடையிடையில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றிக் கிளறி பளபளப்பாக வரும் போது தண்ணீரில் கைகளை நனைத்து தொட்டுப் பார்த்தால் ஒட்டாத போது இறக்கவும்.
  • சூடாக தேவைப்பட்டால் சிறிது நல்லெண்ணெய் அல்லது நெய் கலந்து சாப்பிடவும்.
  • சுவை, சத்து அதிகம். முதுகு வலி, இடுப்பு வலி, எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது.

Wednesday, June 2, 2010

கத்திரிக்காய் அவியல்

தேவையான பொருட்கள் :


  • கத்திரிக்காய்- 1/4 kg
  • சின்ன வெங்காயம்- 4
  • கறிவேப்பிலை- 2 கொத்து
  • கடுகு- 1/2 டீஸ்பூன்
  • எண்ணெய்-2 டீஸ்பூன்
  • உப்பு- 1 டீஸ்பூன்


அரைக்க :


  • தேங்காய் - அரைமுடி
  • சீரகம்-1/4 டீஸ்பூன்
  • மஞ்சத்தூள்- 1/4 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய்- 3
  • சின்ன வெங்காயம்-2


செய்முறை :


  • அரைக்க வேண்டிய பொருட்களை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு முக்கால் பதமாக அரைத்து வைக்கவும்.

  • கத்திரிக்காயை நான்காக நறூக்கி வைக்கவும்.

  • சின்ன வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைக்கவும்.

  • வாணலியில் எண்ணெயை சூடாக்கி அதில் கடுகைப் போட்டு பொரிந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கி கத்திரிக்காயை போட்டு கிளறி அவை முழ்கும் வரைக்கும் தண்ணீரை ஊற்றி வேகவிடவும். உப்பை சேர்க்கவும்.
  • காய் வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைப் போட்டு நன்கு கிளறி உப்பை பதம் பார்த்து தேவையானால் சிறிது சேர்க்கவும்.

  • கறிவேப்பிலையை மேலாக போட்டு இறக்கி விடவும்.
  • சுவையான கத்திரிக்காய் அவியல் தயார்.

Monday, January 25, 2010

Indian Gooseberry Rice

நெல்லிக்கனிச் சோறு / நெல்லிக்காய் சாதம்

வைட்டமின் 'சி' சத்து நிறைந்து, ஆம்லா என்று ஹிந்தி மொழியிலும், அமலாகி என்று வடமொழியிலும் (சமஸ்கிருதம்), Indian Gooseberry என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படுவது பெரிய நெல்லிக்காய் ஆகும். இளமையை நீட்டிக்கும் அரிய இக்காயகற்பத்தை (காயகல்பம் ) எங்ஙனமாயினும் உணவில்
சேர்த்துக் கொள்வது சாலச் சிறந்ததாகும்.


தேவையான பொருட்கள்:


  • வெந்த சோறு (வேக வைத்த சாதம்): 1 கோப்பை
  • நெல்லிக்காய்: 5 (துருவிக் கொள்ளவும்)
  • வறமிளகாய்: 5
  • கறிவேப்பிலை: 2 கொத்து
  • கடுகு: 1/4 தேக்கரண்டி
  • உளுந்தம் பருப்பு (உளுத்தம்பருப்பு): 1/2 தேக்கரண்டி
  • கடலைப்பருப்பு: 1/2 தேக்கரண்டி
  • பெருங்காயம்: 1/4 தேக்கரண்டி
  • முந்திரி: 1 தேக்கரண்டி
  • நிலக்கடலை: 1 தேக்கரண்டி
  • பொட்டுக்கடலை: 1 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள்: 2 சிட்டிகை
  • நெய்: 2 தேக்கரண்டி
  • நல்லெண்ணெய்: 1 மேஜைக்கரண்டி
  • உப்பு: தேவையான அளவு
செய்முறை:

  • இருப்புச்சட்டி என்ற வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு , உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, வறமிளகாய், பெருங்காயம், மஞ்சள் தூள் ஆகியவற்றைப்
    போட்டுத் தாளிக்கவும்.
  • அதோடு துருவப்பட்ட தோப்பு நெல்லிக்காய் அல்லது காட்டு நெல்லிக்காய் என்று சொல்லப்படும் பெரிய நெல்லிக்காயைச் சேர்த்து வதக்கவும்.
  • அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • இக்கலவையுடன் சற்றுமுன் ஆறிய சோற்றைக் கலக்கவும்; கிளறவும்.
  • இத்துடன் முந்திரியையும் , நிலக்கடலையையும், பொட்டுக்கடலையையும் நெய்யில் வறுத்துச் சேர்க்கவும்.
விருப்பப்பட்ட சட்னியுடன் ருசித்துச் சாப்பிடவும்.

Friday, January 15, 2010

Coconut milk kuruma / Thengai paal kuruma

Coconut milk kuruma / Thengai paal kuruma / kurma / kurmaa / korma / kormaa / khorma / khormaa is a very delicious easy to prepare side dish, taken with idli / idly, dosai / dosa, chapati / chapatti / chappaathi, purotta / parantha / barotta.


தேங்காய்ப் பால் குருமா


சுவையான இந்தக் குருமா, இட்லி,தோசை,சப்பாத்தி, புரோட்டா போன்றவற்றுடன் சேர்த்துக்கொள்ள மிகவும் அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:


தேங்காய்ப் பால்: இரண்டு கப்

உருளைக்கிழங்கு; இரண்டு

சின்ன வெங்காயம்: பத்து

காரட்: இரண்டு

தக்காளி: இரண்டு

தேங்காய்ப் பூ என்னும் துருவப்பட்ட தேங்காய்: இரண்டு தேக்கரண்டி
பொட்டுக்கடலை: கால் கப்
(இதை சிவகங்கைப் பகுதிகளில் பொரிகடலை என்பார்கள்.)

முந்திரிப் பருப்பு: சுமார் பத்து

பச்சைமிளகாய்: இரண்டு

கசகசா: ஒரு தேக்கரண்டி

பட்டை: சிறிதளவு

லவங்கம்: சிறிதளவு

சோம்பு: சிறிதளவு



செய்முறை:


  • உருளைக்கிழங்குகளை வேகவைத்து, தோலுரித்து, சிறிய துண்டுகளாக்கவும்.


  • வெங்காயத்தைத் தோலுரிக்கவும்.


  • காரட்டையும் தக்காளியையும் பொடிப்பொடியாக நறுக்கவும்.

  • தேங்காய்ப் பூ, பொட்டுக்கடலை, முந்திரிப் பருப்பு, பச்சைமிளகாய், கசகசா ஆகியவற்றை மை போல ( விழுது போல) அரைக்கவும்.

  • இருப்புச்சட்டி என்று சொல்லப்படும் வாணலியில் எண்ணையைக் காய வைத்து பட்டை, லவங்கம், சோம்பு வறுக்கவும்.

  • அதோடு வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

  • மேலும் நறுக்கப்பட்ட உருளைக்கிழங்கு, காரட், தக்காளி சேர்த்து உப்புப் போட்டு வதக்கவும்.

  • இத்துடன் அரைத்த விழுதையும் கால் கப் தண்ணீரையும் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

  • நிறைவாக, தேங்காய்ப் பால் சேர்க்கவும். கொதித்தவுடன் இறக்கி விடவும்.

மனநிறைவுடன் மகிழ்ச்சியாக உணவருந்தவும்.

Wednesday, December 23, 2009

Aval payasam

It is a quick and easy to prepare dessert.


அவல் பாயாசம்


இந்த இனிப்பான பாயாசம், உடனடியாகச் செய்யத்தக்கதாகும்.


தேவையான பொருட்கள்:


  • அவல்: 1/2 கப்

  • நெய்: சிறிதளவு

  • பால்: 2 கப்

  • சர்க்கரை: 1 1/2 கப்

  • முந்திரி: பத்து அல்லது பதினைந்து
  • திராட்சை: பத்து அல்லது பதினைந்து
செய்முறை:

  • அவலை அரைகுறையாக அரைக்கவும்.

  • அரைத்த அவலை நெய்யில் சிவக்க வறுக்கவும்.

  • முந்திரிப் பருப்புகளையும் வறுக்கவும்.

  • பாலைக் காய்ச்சவும்.

  • கொதிக்கும் பாலில் அவலைச் சேர்த்து சுமார் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு சர்க்கரையைச் சேர்த்து கிளறிக் கொண்டு, முந்திரியைப் போடவும்.

  • கிஸ்மிஸ் என்னும் உலர் திராட்சையையும் போட்டுக் கிண்டி விடவும்.

  • மகிழ்வுடன் பரிமாறி அருந்தி மகிழவும்.

Thursday, December 17, 2009

Cashew nut Pakkoda / Gaaju pakora

Cashew nut pakkoda is a very crispy and tasty snack.


முந்திரி பக்கோடா


தேவையான பொருட்கள்:



  • முந்திரிப் பருப்பு - 100 கிராம்

  • கடலை மாவு - 1 கப்

  • மிளகாய்ப் பொடி - 1 தேக்கரண்டி

  • பெருங்காயத்தூள் - சிறிதளவு

  • எண்ணெய் - தேவையான அளவு

  • உப்பு - தேவையான அளவு

செய்முறை:


  • கடலை மாவில் சிறிதளவு தண்ணீரைத் தெளித்து, முந்திரிப் பருப்பு, பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்ப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து, கட்டிபடாமல் பிசையவும்.




  • மிதமாக எரியும் அடுப்பில் இருப்புச்சட்டி என்னும் வாணலியை வைத்து எண்ணெய் விடவும்.
  • சூடேறியதும், பிசைந்து வைக்கப்பட்டுள்ள கலவையை உதிர்த்து தங்கமான நிறத்தில் வறுத்து அரிகரண்டியின் துணை கொண்டு முந்திரி பக்கோடாவை எடுக்கவும்.